தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 சிவ ஸ்தலங்களில் 31 வது ஸ்தலம்.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி, அழகியநாயகி.
அரச மரத்தை இறைவன் வீடாக (இல்லாக) கொண்டமையால் இப்பெயர் பெற்றது. இந்த கோயில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. வாமதேவ முனிவர், சாளுக்கிய மன்னனும் பிரதோஷ நாளில் வழிபட்டுப் பேறு பெற்றனர். மூலவர் - சிவலிங்கத் திருமேனி; குட்டையான பாணம்; ஆவுடையாரும் தாழவுள்ளது.
பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியம் தோள்மேல் ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்