3. திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 சிவ ஸ்தலங்களில் 31 வது ஸ்தலம்.


இறைவர் திருப்பெயர் : அரசிலிநாதர்,  அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி, அழகியநாயகி.

அரச மரத்தை இறைவன் வீடாக (இல்லாக) கொண்டமையால் இப்பெயர் பெற்றது. இந்த கோயில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. வாமதேவ முனிவர், சாளுக்கிய மன்னனும்  பிரதோஷ நாளில் வழிபட்டுப் பேறு பெற்றனர். மூலவர் - சிவலிங்கத் திருமேனி; குட்டையான பாணம்; ஆவுடையாரும் தாழவுள்ளது.

 பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை 
 கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி 
 வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியம் தோள்மேல் 
 ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்