இறைவன் : சிவானந்தேஸ்வரர்.
இறைவி: ஆனந்தவல்லி.
சோழர் காலத்தில் கட்டப்பெற்ற இத்திருக்கோயில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புராணங்களின் படி ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் திருக்கள்ளில் அருகில் உள்ள சிறுவாபுரி என்னும் ஊரில் வசித்து வந்துள்ளனர். அப்பொழுது அகர்கள் இருவரும் இத்திருத்தலத்திற்கு வந்து இங்கு உள்ள கொசஸ்தலை ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. புராணகாலத்தில், இந்த இடம் கள்ளி மரங்கள் நிறைந்த காடாக இருந்ததனால் இவ்விடம் கள்ளில் என அழைக்கப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் திருக்கண்டலம் ஆகும்.
திருஞானசம்பந்தர் திருவெண்பாக்கம் சென்று இறைவனை தரிசனம் செய்த பிறகு திருக்கள்ளில் வந்தடைந்தார். அப்பொழுது அவர் கொசஸ்தலை ஆற்றில் நீராடியபொழுது அவருடைய பூஜை சாமான்கள் அடங்கிய பெட்டியும், திருநீற்று பையும் காணாமல் போனது. அவற்றை தேடியபொழுது .அவர் இவ்விடம் ஓர் சிவலிங்கம் கள்ளி மரங்களுக்கிடையில் காணப்பெற்றார். மேலும் காணாமற்போன தன்னுடைய பூஜை பெட்டியும், திருநீற்றுப்பையும் அங்கு இருப்பதை கண்டறிந்து நடந்தது அனைத்தும் இறைவனின் திருவிளையாடல் என்றறிந்தார். ஆதலால், அவர் இறைவனைப் பற்றி தனது பதிகத்தில் கள்வன் என்று குறிப்பிடுகின்றார்.
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்