176. குடந்தைக் கீழ்க்கோட்டம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  114 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 27 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  நாகேஸ்வரர்.

இறைவி:  பிரஹந்நாயகி.






சொன்மலிந்த மறை நான்காறங்கமாகிச்
        சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதிபோலும்
கன்மலைந்த கயிலைமலை வாணர் போலும்
        கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர்போலும்
மன்மலிந்த மணிவரைத் திண்தோளர்போலும்
        மலையரையன் மடப்பாவை மணாளர்போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர்போலும்
        குடந்தைக்கீழ்க் கோட்டத் தெங்கூத்தனாரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்